ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள வடமேற்கு குர்மார்க்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று காலை 11.8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது.
இன்று அதிகாலை பஹல்காமில் இருந்து தென்மேற்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை